‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் ஆடியோ உரிமை சுமார் 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் திரையுலகத்தில் சமீபகாலத்தில் இந்த அளவு விலைக்கு வேறு எந்தப் படங்களின் ஆடியோ உரிமையும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் கூட கடந்த வருடமே போடப்பட்டுவிட்டது என்றும் தகவல்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதுதான் இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ உரிமை இந்த அளவிற்கு விற்கக் காரணமாக அமைந்துள்ளதாம்.
இதற்கு முன்பு 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஆடியோ உரிமை 25 கோடிக்கும், 'சாஹோ' படத்தின் ஆடியோ உரிமை 22 கோடிக்கும், 'பாகுபலி 2' படத்திற்கு 12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். அடுத்த சில வாரங்களில் 'புஷ்பா 2' படத்தின் மற்ற வியாபார உரிமைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் சொல்கிறார்கள்.