நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் ஆடியோ உரிமை சுமார் 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் திரையுலகத்தில் சமீபகாலத்தில் இந்த அளவு விலைக்கு வேறு எந்தப் படங்களின் ஆடியோ உரிமையும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் கூட கடந்த வருடமே போடப்பட்டுவிட்டது என்றும் தகவல்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதுதான் இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ உரிமை இந்த அளவிற்கு விற்கக் காரணமாக அமைந்துள்ளதாம்.
இதற்கு முன்பு 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஆடியோ உரிமை 25 கோடிக்கும், 'சாஹோ' படத்தின் ஆடியோ உரிமை 22 கோடிக்கும், 'பாகுபலி 2' படத்திற்கு 12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். அடுத்த சில வாரங்களில் 'புஷ்பா 2' படத்தின் மற்ற வியாபார உரிமைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் சொல்கிறார்கள்.