அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தின் ஆடியோ உரிமை சுமார் 50 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியத் திரையுலகத்தில் சமீபகாலத்தில் இந்த அளவு விலைக்கு வேறு எந்தப் படங்களின் ஆடியோ உரிமையும் விற்கப்படவில்லை என்கிறார்கள். இதற்கான ஒப்பந்தம் கூட கடந்த வருடமே போடப்பட்டுவிட்டது என்றும் தகவல்.
'புஷ்பா' படத்தின் முதல் பாகப் பாடல்கள் தெலுங்கில் மட்டுமல்லாது, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பைப் பெற்றன. அதுதான் இரண்டாம் பாகத்திற்கான ஆடியோ உரிமை இந்த அளவிற்கு விற்கக் காரணமாக அமைந்துள்ளதாம்.
இதற்கு முன்பு 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஆடியோ உரிமை 25 கோடிக்கும், 'சாஹோ' படத்தின் ஆடியோ உரிமை 22 கோடிக்கும், 'பாகுபலி 2' படத்திற்கு 12 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாம். அடுத்த சில வாரங்களில் 'புஷ்பா 2' படத்தின் மற்ற வியாபார உரிமைகள் பற்றிய விவரங்கள் வெளியாகி ஆச்சரியத்தைக் கொடுக்கலாம் என்றும் டோலிவுட்டில் சொல்கிறார்கள்.