தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

ஹிந்தியில் சைத்தான் படத்தை அடுத்து இரண்டு புதிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜோதிகா. தமிழில் 2021ம் ஆண்டு ரா.சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ‛உடன்பிறப்பே' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்ணன்- தங்கை செண்டிமென்ட் கதையில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான கதை பணியில் ஈடுபட்டிருந்தார் சரவணன். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஹிந்தியிலும் ஜோதிகாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.