ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

ஹிந்தியில் சைத்தான் படத்தை அடுத்து இரண்டு புதிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் ஜோதிகா. தமிழில் 2021ம் ஆண்டு ரா.சரவணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சசிகுமாருடன் இணைந்து ஜோதிகா நடித்திருந்த ‛உடன்பிறப்பே' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
அண்ணன்- தங்கை செண்டிமென்ட் கதையில் உருவான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கான கதை பணியில் ஈடுபட்டிருந்தார் சரவணன். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ஹிந்தியிலும் ஜோதிகாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளதால், இப்படத்தை பான் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.