இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்தது மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இதையடுத்து தமிழில் 'அஞ்சான்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு அவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் குறிப்பிட்ட ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. இப்போது இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வித்யூத் ஜம்வால் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.