தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் | 'மை டியர் சிஸ்டர்' என்ன மாதிரியான கதை |

சின்னத்திரை தம்பதிகளான பிரஜன் - சாண்ட்ரா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது பிரஜன் மட்டும் ஆக்டிவாக சினிமாக்களில் நடித்து வருகிறார். சாண்ட்ரா பொறுப்பான குடும்ப தலைவியாக குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளனர்.
அதில், 'நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அரிசி மூட்டை எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பின் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். யாருமே உதவி செய்யவில்லை. பிரஜன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்வார். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம்' என கூறியுள்ளனர்.




