Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணிக்கு கிடைத்த வெற்றி

16 மார், 2024 - 14:49 IST
எழுத்தின் அளவு:
Goundamani-got-success-after-20-years

தமிழ் சினிமாவின் லெஜண்ட் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் முக்கியமானவர். தற்போது கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவர் கடந்த 1998ம் ஆண்டு ஒரு கட்டுமான நிறுவனத்திடம் தனக்கு சொந்தமான 2700 சதுர அடி நிலத்தை கொடுத்து அதில் வணிக வளாகங்கள் கட்டித் தருமாறு 3.58 கோடிக்கு ஒப்பந்தம் போட்டு, அதில் ஒரு கோடியே 4 லட்ச ரூபாய் வரை அவர் செலுத்தி உள்ளார். ஆனால் அந்த நிறுவனம் கட்டுமான பணிகளை தொடங்காமல் இழுத்து அடித்து வந்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கவுண்டமணி.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கவுண்டமணியிடம் இருந்து பெற்ற இடத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டதோடு, கவுண்டமணி இடம் அந்த நிலத்தை ஒப்படைக்கும் நாள் வரை மாதம் ஒரு லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து அந்த கட்டுமான நிறுவனம் மேல்முறையீடு செய்து வந்த நிலையில், நேற்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில் மேல்முறையீடு குறித்த வழக்கை தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம், ஏற்கனவே வழங்கிய முந்தைய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாக கவுண்டமணி நடத்தி வந்த சட்டப் போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ரொமான்ஸ்'அசோக் செல்வனின் 'எமக்குத் தொழில் ... தமிழில் மீண்டும் பிஸியான தேவிஸ்ரீ பிரசாத் தமிழில் மீண்டும் பிஸியான தேவிஸ்ரீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Nallavan - Periyakulam,இந்தியா
21 மார், 2024 - 10:50 Report Abuse
Nallavan வாழ்க நீதி மன்றங்கள், நீதி அரசர்கள். எவ்வளவு வேகமான தீர்ப்பு. இல்லாத ஏழைகளாக இருந்தால், கவலையிலேயே மடிந்திருப்பார்கள். நல்ல நாடு. நல்ல நீதி மான்கள். விளங்கிடும்.
Rate this:
Sakthi Parthasarathy - Ras Al Khaimah,ஐக்கிய அரபு நாடுகள்
19 மார், 2024 - 12:41 Report Abuse
Sakthi Parthasarathy நிறுவனத்தின் பெயர் வெளியிடலாம்
Rate this:
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
17 மார், 2024 - 22:12 Report Abuse
N Annamalai மிக்க மகிழ்ச்சி
Rate this:
M Selvaraaj Prabu - Kanjikode, Palakad,இந்தியா
17 மார், 2024 - 19:09 Report Abuse
M Selvaraaj Prabu உண்மையிலேயே நல்ல விஷயம். உழைத்து சம்பாதித்த பணத்தை யாரும் ஏமாற்ற கூடாது. அந்த கட்டுமான நிறுவனத்தின் பெயரை வெளியிட்டருந்தால் மக்கள் கவனமாக இருக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in