நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
பிரித்விராஜ் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் என மிக நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த ஆடுஜீவிதம் திரைப்படம் வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பிளஸ்சி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார். பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. இதில் அரபு நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் நபராக நடித்துள்ளார் பிரித்விராஜ்.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்திலேயே லைவ் ரெக்கார்டிங் முறை பயன்படுத்தப்பட்டு வசனங்கள் லைவ் ஆக பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் தனது கதாபாத்திரத்திற்கு பிரித்விராஜே டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு முறை உயிரோடு வாழ்ந்த இடத்திற்கு நான்கு முறை மறு விசிட் அடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.