வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
"யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும், ஆயிரம் பொன் என்ற பழமொழி, மறைந்த நடிகை, சில்க் ஸ்மிதாவுக்கு, மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அவர், உயிருடன் இருந்தபோது, அவர் நடிப்பில் வெளியான, பல படங்கள், வசூலை வாரி குவித்தன.அவர் இறந்த பின், அவரது வாழ்க்கையை மையமாக வைத்து, பல மொழிகளிலும் படங்கள் தயாரிக்கப்பட்டு, அவையும், தயாரிப்பாளர்களின் கல்லா பெட்டிகளை நிரப்புகின்றன. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்தியில், வித்யா பாலன் நடித்த படம், பயங்கர ஹிட் ஆனதோடு, வித்யாவுக்கு, சிறந்த நடிகை விருதையும் பெற்றுத் தந்தது.தற்போது மலையாளத்திலும், இதே போன்ற ஒரு படம் தயாராகிறது. இதில், சனா கான், சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்துள்ளார். இந்தி படம் போல் அல்லாமல், இதில், சில உண்மை சம்பவங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளரோ, "இது, சில்க் ஸ்மிதா கதையில்லை என்கிறாராம்.