பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
சமீபகாலமாக ரசிகர்கள் பலர் நடிகர்களிடம் ரொம்பவே உரிமை எடுத்துக் கொள்கின்றனர். அப்படித்தான் சமீபத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, டொவினோ தாமஸ் ஆகியோரிடம் சில மாணவர்கள் நீங்கள் எங்களது பதிவில் கமெண்ட் இட்டால் தான் நாங்கள் தேர்வுக்கு படிக்க துவங்குவோம் எனக் கூற அவர்களும் அதேபோல செய்தார்கள். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தற்போது தெலுங்கில் உருவாகி வரும் தி பேமிலி மேன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட விஜய் தேவரகொண்டா சரியாக மாலை 5 மணிக்கு டீசர் வெளியாகி விடும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் சொன்ன நேரத்தை விட இரண்டு மணி நேரங்களுக்கு மேல் தாமதமாகவே ரசிகர் ஒருவர், “எவ்வளவு நேரமாக காத்துக் கொண்டிருப்பது ? எப்போது தான் டீசரை வெளியிடுவீர்கள் ? என்ன நடக்கிறது இங்கே ?” என்று கோபத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு ரொம்பவே கூலாக பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, “ஸாரி டியர்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் டீசர் வெளியாகி விடும்.. அதற்கான அப்லோடிங் போய்க் கொண்டிருக்கிறது. பொறுத்துக் கொள்ளுங்கள்” என்று கெஞ்சுவது போன்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
அதேசமயம் விஜய் தேவரகொண்டா இப்படி நடந்து கொள்வது தனது படத்தின் புரமோசனுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் தான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.