25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இதனை சிதம்பரம் என்பவர் இயக்கினார். உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து இந்த படம் சாதித்துளளது. தொடர்ந்து இந்தப்படம் மற்றொரு வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் சிதம்பரம் தமிழகத்தில் உள்ள திரைப்பிரபலங்களை சந்தித்து வருகிறார். நடிகர் தனுஷையும் சந்தித்தார்.
தற்போது இவர் அடுத்து தமிழில் தான் அதிகபட்சமாக படம் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை சிதம்பரம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல் ஆளாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சிதம்பரத்திற்கு அட்வான்ஸ் கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.