இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் தொடர்ந்து தாங்கள் மட்டும் இன்றி தங்களது மகன்களின் புகைப்படம், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று தனது இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவனை அன் பாலோ செய்திருக்கிறார் நயன்தாரா.
அது மட்டுமின்றி, ‛இது எனக்கு கிடைத்தது என்று அவளது கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்' என்ற ஒரு பதிவையும் போட்டுள்ளார் நயன்தாரா. அவரது புகைப்படத்துடன் கூடிய இந்த வாசகமும் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, ஒருவேளை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பிரிந்து விட்டார்களோ, அதனால்தான் அவரை அன்பாலோ செய்துள்ளாரோ நயன்தாரா என்று நெட்டிசன்கள் தங்களது யூகங்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் விக்னேஷ்சிவனை மீண்டும் பாலோ செய்தார் நயன்தாரா. மேலும், அவரது பதிவு, தற்செயலானதா அல்லது தங்களது படத்திற்கான விளம்பர யுக்தியா எனத் தெரியவில்லை.




