இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன் பல படங்களில் பாடியிருக்கிறார். இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துள்ளார் வேல் முருகன்.
இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் வேல்முருகனின் விமான பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தனது செயல்பாட்டுக்கு வேல்முருகன் மன்னிப்பு கேட்டுக் கொண்டதை அடுத்து அவரை வேறு விமானத்தில் திருச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.