ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், எந்த ஒரு புதிய மலையாள படத்தையும் தாங்கள் திரையிட போவதில்லை என்று போராட்டம் அறிவித்தது. மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் படங்களை எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனை. ஆனால் அதை மீறி பல தயாரிப்பாளர்கள் நான்கு வாரங்களிலேயே தங்களது படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதனால் தியேட்டர் வருமானம் பாதிப்பதாக கூறித்தான் இந்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதனால் இந்த போராட்டம் எப்போது முடியும் என தெரியாததால் ஒரு சில படங்கள் பிப்ரவரி 22ம் தேதியே வெளியாகின. அப்படி வெளியான படம் தான் தற்போது சூப்பர் ஹிட்டாக மாறி உள்ள 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக, அதிலும் குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் வெளியான படங்கள் வாரத்திற்கு ஒன்றாக ஹிட் அடித்து ரசிகர்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வர செய்துள்ளன.
இதனை கவனித்த கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகளை நோக்கி வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் போராட்டத்தை அறிவித்து வசூல் ரீதியான பின்னடைவை சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அதனால் வரும் வெள்ளியில் இருந்து வழக்கம் போல படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.




