ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ |
மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், எந்த ஒரு புதிய மலையாள படத்தையும் தாங்கள் திரையிட போவதில்லை என்று போராட்டம் அறிவித்தது. மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் படங்களை எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனை. ஆனால் அதை மீறி பல தயாரிப்பாளர்கள் நான்கு வாரங்களிலேயே தங்களது படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதனால் தியேட்டர் வருமானம் பாதிப்பதாக கூறித்தான் இந்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதனால் இந்த போராட்டம் எப்போது முடியும் என தெரியாததால் ஒரு சில படங்கள் பிப்ரவரி 22ம் தேதியே வெளியாகின. அப்படி வெளியான படம் தான் தற்போது சூப்பர் ஹிட்டாக மாறி உள்ள 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக, அதிலும் குறிப்பாக இந்த பிப்ரவரி மாதம் வெளியான படங்கள் வாரத்திற்கு ஒன்றாக ஹிட் அடித்து ரசிகர்களை தியேட்டருக்கு கூட்டம் கூட்டமாக வர செய்துள்ளன.
இதனை கவனித்த கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், ரசிகர்கள் ஆர்வமாக திரையரங்குகளை நோக்கி வரும் இந்த சமயத்தில் தேவையில்லாமல் போராட்டத்தை அறிவித்து வசூல் ரீதியான பின்னடைவை சந்திக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.. அதனால் வரும் வெள்ளியில் இருந்து வழக்கம் போல படங்கள் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது.