பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! |

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் என்றஇசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அடிப்படையில் இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது தயாரிப்பின் மூலம் புதிய இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
தற்போது பரத் தனசேகர் ரோமியோ படத்தில் இடம் பெறும் செல்லக்கிளியே... என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். ஆதித்யா பாடி உள்ளார்.
இது குறித்து தனசேகர் கூறியதாவது: இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த டியூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யா ஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்த இசை 'செல்லக்கிள்ளி' பாடலுக்கு உயர் தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார்.




