சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரோமியோ'. இந்தப் படத்தின் மூலம் பரத் தனசேகர் என்றஇசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அடிப்படையில் இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தனது தயாரிப்பின் மூலம் புதிய இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்துகிறார்.
தற்போது பரத் தனசேகர் ரோமியோ படத்தில் இடம் பெறும் செல்லக்கிளியே... என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளார். பாடலை விஜய் ஆண்டனி, ஹேமந்த் பிரகாஷ், ஜெனிபர் ராஜசேகர் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். ஆதித்யா பாடி உள்ளார்.
இது குறித்து தனசேகர் கூறியதாவது: இந்தப் படத்திற்காக முதன் முதலாக இசையமைத்த டியூன் இதுதான். மிகவும் அன்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளோம். இந்தப் பாடலுக்கு பாடகர் ஆதித்யா ஆர்.கேவின் குரல் உயிர் கொடுத்துள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால் லைவாக புடாபெஸ்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் ஒலிகளை இந்தப் பாடலுக்குப் பயன்படுத்தியுள்ளோம். இந்த இசை 'செல்லக்கிள்ளி' பாடலுக்கு உயர் தரத்தை கொடுத்துள்ளது. இந்தப் பாடல் எனது இசை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றார்.




