எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரோமியோ'. மிகச் சுமாரான வரவேற்பையே இப்படம் பெற்றது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தது.
இந்நிலையில் படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு கடுமையான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி 'ரோமியோ' போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும்… ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில், கமல்ஹாசன், மாதவன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'அன்பே சிவம்' படம் வசூல் ரீதியாக ஓடவில்லை என்றாலும் அந்தப் படம் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு படத்துடன் 'ரோமியோ' படத்தை விஜய் ஆண்டனி ஒப்பிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.