விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

'ஏஐ' என அழைக்கப்படும் 'Artificial Intelligence' மூலம் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரல் மூலம் பாடல் ஒன்றை பயன்படுத்திய 'கீடா கோலா' பட இயக்குனர் மீது எஸ்பிபி சரண் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன் அனுமதி பெறாமல் இப்படி தனது அப்பாவின் குரலைப் பயன்படுத்தியதற்காக எஸ்பிபி சரண் சார்பாக அவரது வழக்கறிஞர் கவிதா தீனதயாளன் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை படக்குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.
“சரண் மற்றும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் இப்படி எஸ்பிபி அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதை அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். அதேசமயம் அதை வியாபார ரீதியாகவோ, படங்களிலோ பயன்படுத்துவதுதான் சிக்கலை உருவாக்குகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தார். மறைந்த பாடகர்களின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று, சரியான அங்கீகாரமும் கொடுத்துள்ளார். ஆனால், ‛கீடா கோலா' குழுவினர் எந்தவிதமான முன் அனுமதியையும் பெறவில்லை, எந்தவித அங்கீகாரமும் கொடுக்கவில்லை.
நாங்கள் படக்குழுவிடம் மன்னிப்பையும், 1 கோடி ரூபாய் ராயல்டியும் தர வேண்டும் எனக் கேட்டுள்ளோம். சட்டத்திற்குப் புறம்பாக இப்படி மறைந்த பாடகர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு நாங்கள்தான் முதலில் வழக்கு தொடுக்கிறோம் என நினைக்கிறேன்.
இதற்கு முன்பு பல பேட்டிகளில் இப்படி ஏஐ மூலம் எஸ்பிபி அவர்களின் குரலைப் பயன்படுத்தியது குறித்து பேட்டி அளித்த படக்குழுவினர், தற்போது முழுவதையும் நிராகரித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.
தருண் பாஸ்கர் இயக்கியுள்ள 'கீடா கோலா' படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தெலுங்கில் வெளியான ஒரு படம்.