Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்பிபி-யின் 'ஏஐ' குரல் : வழக்கு தொடுத்த எஸ்பிபி சரண்

22 பிப், 2024 - 11:04 IST
எழுத்தின் அளவு:
SBBs-AI-voice-:-SBB-Charan-filed-suit

'ஏஐ' என அழைக்கப்படும் 'Artificial Intelligence' மூலம் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் குரல் மூலம் பாடல் ஒன்றை பயன்படுத்திய 'கீடா கோலா' பட இயக்குனர் மீது எஸ்பிபி சரண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன் அனுமதி பெறாமல் இப்படி தனது அப்பாவின் குரலைப் பயன்படுத்தியதற்காக எஸ்பிபி சரண் சார்பாக அவரது வழக்கறிஞர் கவிதா தீனதயாளன் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை படக்குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.

“சரண் மற்றும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் இப்படி எஸ்பிபி அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதை அன்பின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். அதேசமயம் அதை வியாபார ரீதியாகவோ, படங்களிலோ பயன்படுத்துவதுதான் சிக்கலை உருவாக்குகிறது. சமீபத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அதை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தார். மறைந்த பாடகர்களின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று, சரியான அங்கீகாரமும் கொடுத்துள்ளார். ஆனால், ‛கீடா கோலா' குழுவினர் எந்தவிதமான முன் அனுமதியையும் பெறவில்லை, எந்தவித அங்கீகாரமும் கொடுக்கவில்லை.

நாங்கள் படக்குழுவிடம் மன்னிப்பையும், 1 கோடி ரூபாய் ராயல்டியும் தர வேண்டும் எனக் கேட்டுள்ளோம். சட்டத்திற்குப் புறம்பாக இப்படி மறைந்த பாடகர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு நாங்கள்தான் முதலில் வழக்கு தொடுக்கிறோம் என நினைக்கிறேன்.

இதற்கு முன்பு பல பேட்டிகளில் இப்படி ஏஐ மூலம் எஸ்பிபி அவர்களின் குரலைப் பயன்படுத்தியது குறித்து பேட்டி அளித்த படக்குழுவினர், தற்போது முழுவதையும் நிராகரித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது.

தருண் பாஸ்கர் இயக்கியுள்ள 'கீடா கோலா' படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் தெலுங்கில் வெளியான ஒரு படம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அவதூறு : மாஜி அதிமுக., நிர்வாகி மீது கருணாஸ் போலீஸில் புகார்அவதூறு : மாஜி அதிமுக., நிர்வாகி மீது ... 'இந்தியன் 2' படத்தின் வியாபாரம் பரபரப்பாக ஆரம்பம் 'இந்தியன் 2' படத்தின் வியாபாரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Siva Subramaniam - Coimbatore,இந்தியா
22 பிப், 2024 - 09:02 Report Abuse
Siva Subramaniam இது வெறும் ஆரம்பம்தான்.எ ஐ மூலம் இனி என்னவெல்லாம் நடக்கும் என்று பொ றுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த நாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லாமே மற்றவர்களை இழிவு படுத்த தான் உபயோகிக்கப்பட்டுள்ளது இதுவும் அப்படிதான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in