பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் |
2014ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலை எதிர்த்து போரிட்டு மூன்று தீவிரவாதிகளைக் கொன்று பின் வீரமரணம் அடைந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது பயோபிக் படமாக சிவகார்த்திகேயன் நடிக்க 'அமரன்' படம் தயாராகி வருகிறது.
இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வீடியோவுடன் வெளியிடப்பட்டது. படம் குறித்து மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் நெகிழ்சியான பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“அமரன், முடிவற்றவன்… என்றும் என்னுள் நிறைந்துள்ள ஒரு பெயர். இதை எப்படிச் சொல்வது என்று நான் ஆயிரம் முறை யோசித்தேன். ஆனால், எப்போதும் போல என் இதயத்தை பேச அனுமதிப்பேன். ஒரு தசாப்தம் கடந்துவிட்டது.
இப்போது அவரது நினைவையும், தேசபக்தியையும் வெள்ளித்திரையில் நிரந்தரமாக்குவதற்கான நேரம் இது. படத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்பதை மறுக்க முடியாது. ஆனால், இந்த உற்சாகம் என்றும் அழியாத துக்கம், எல்லையற்ற அன்பு மற்றும் மாறாத நம்பிக்கையுடன் கலந்திருக்கும்.
ஒரு தகுதியான காரணத்திற்காக மிகவும் விலையுயர்ந்ததை இழப்பது என்பதை அறிந்த எங்கள் குடும்பத்தினர் மற்றும் ஒவ்வொரு ஆன்மாவும் வலிமையிலும், துக்கத்திலும் நிற்கிறோம், ஜெய்ஹிந்த்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது பதிவுக்கு படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, “அமரன், அன்புள்ள இந்து ரெபேக்கா மேடம், என்னையும் எனது குழுவினரையும் நம்பியதற்கும், இவ்வளவு பெரிய பொறுப்பிற்கும் நன்றி. மேஜர் முகுந்த் வராதராஜன் சாரின் தன்னலமற்ற சேவைக்கும், உங்களுக்கும், உங்களது குடும்பத்தாருக்கும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்,” என பதிலளித்துள்ளார்.