ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் வாணி போஜன். ஓ மை கடவுளே, லாக்அப், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், மிரள், பாயும் ஒளி நீ எனக்கு, லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் ராக்கர்ஸ், செங்களம் வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆர்யன், கேசினோ, பகைவனுக்கு அருள்வாய் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யை வரவேற்ற வாணி போஜன், அவருக்கு தமிழக மக்கள் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது “நான் செங்களம் என்ற தொடரில் நடித்தபோது எனக்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போதும் அரசியலுக்கு வர ஆசை இருக்கிறது. தனி கட்சி தொடங்கி உள்ள விஜய்க்கு அரசியலில் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார், அவருடைய நோக்கம் என்ன என்பது பற்றி நமக்கும் தெரியவரும். அவர் என்ன செய்வார் என்பதை பார்க்கலாம். அரசியலில் இவர்கள்தான் வரவேண்டும் என்று இல்லை. நல்லது செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்'' என்றார்.