Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழுக்கு வரும் கயடு லோஹர்

10 பிப், 2024 - 12:12 IST
எழுத்தின் அளவு:
Kayadu-Lohar-coming-to-Tamil


அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயடு லோஹர். 'முகில்பேட்' என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 'தெல்லூரி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தற்போது 'நிலா வரும் வேளை' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார். மிராக்கிள் மூவீஸ் சார்பில் ஸ்ருதி செல்லப்பா தயாரிக்கிறார்.

இதனை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஏ.ஹரிகரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது த்ரில்லர் வகை கதை. படத்தில் காடு ஒரு முக்கிய லொகேஷனாக இருக்கும். அதுதவிர பல லொகேஷன்களில் படமாக்குகிறோம். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கவில்லை. தமிழில் எடுத்துவிட்டு, பிறகு தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இரு மொழி ரசிகர்களுக்கும் இந்த கதை, கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு படத்தில் நடித்தவர் கயடு லோஹர். இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் ஹீரோயின். 1970களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எத்தனை கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்! - ஜி.வி.பிரகாஷ் உறுதிஎத்தனை கோடி கொடுத்தாலும் அதை செய்ய ... இறுதிகட்டத்தில் சசிகுமார் படம் இறுதிகட்டத்தில் சசிகுமார் படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)