பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை |

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயடு லோஹர். 'முகில்பேட்' என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 'தெல்லூரி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தற்போது 'நிலா வரும் வேளை' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார். மிராக்கிள் மூவீஸ் சார்பில் ஸ்ருதி செல்லப்பா தயாரிக்கிறார்.
இதனை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஏ.ஹரிகரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது த்ரில்லர் வகை கதை. படத்தில் காடு ஒரு முக்கிய லொகேஷனாக இருக்கும். அதுதவிர பல லொகேஷன்களில் படமாக்குகிறோம். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கவில்லை. தமிழில் எடுத்துவிட்டு, பிறகு தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இரு மொழி ரசிகர்களுக்கும் இந்த கதை, கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு படத்தில் நடித்தவர் கயடு லோஹர். இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் ஹீரோயின். 1970களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. என்றார்.




