தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் அவர் நடிக்க போகிறார். சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அதோடு, இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிர்ணாள் தாக்கூர் அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இப்படம் அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகிறது.