வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு |
சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களிடம் ரீச்சானார். தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் பெரிய அளவில் அவருக்கு ப்ரேக் கிடைக்கவில்லை. அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'ராஜா ராணி படத்தில் ஆர்யா ஹீரோ, அட்லி இயக்குநர். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் நான் தான் என நடிப்பதற்கு அழைப்பு வந்தது. தயாரிப்பு பற்றி அப்போது எனக்கு தெரியாது. நான் இரண்டு நாட்கள் நடித்தேன். அதன்பிறகு அழைப்பதாக சொன்னார்கள். ஆனால் படத்தின் ஷூட்டிங் முடிந்து படமே ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் நான் டேட்டுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்த படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. எதில் தவறு நடந்தது என்று தெரியவில்லை. அதை பற்றி நான் பேச விரும்பவில்லை' என்று அதில் கூறியுள்ளார்.