உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

சினிமா நடிகை சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களிடம் ரீச்சானார். தற்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் பெரிய அளவில் அவருக்கு ப்ரேக் கிடைக்கவில்லை. அண்மையில் அவர் அளித்த பேட்டியில், 'ராஜா ராணி படத்தில் ஆர்யா ஹீரோ, அட்லி இயக்குநர். இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் நான் தான் என நடிப்பதற்கு அழைப்பு வந்தது. தயாரிப்பு பற்றி அப்போது எனக்கு தெரியாது. நான் இரண்டு நாட்கள் நடித்தேன். அதன்பிறகு அழைப்பதாக சொன்னார்கள். ஆனால் படத்தின் ஷூட்டிங் முடிந்து படமே ரிலீஸாகிவிட்டது. ஆனாலும் நான் டேட்டுக்காக வெயிட் செய்து கொண்டிருந்தேன். அந்த படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. எதில் தவறு நடந்தது என்று தெரியவில்லை. அதை பற்றி நான் பேச விரும்பவில்லை' என்று அதில் கூறியுள்ளார்.