இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி... என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன நடக்கும். உண்மையில் அந்த பெண்களை நினைத்து பயம் வருகிறது. ஒருவேளை அதுபற்றி நான் பேசினால் டீப்பேக் என்றால் என்ன?, அது சரியானதா, என குறைந்தபட்சம் மக்களையாவது சென்றடையும். அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்'' என்கிறார்.