கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ஏஐ தொழில்நுட்பம் மூலம் சினிமா நடிகைகளின் போலியான டீப் பேக் வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றன. ராஷ்மிகா, கஜோல், கத்ரீனா கைப், ஆலியாபட், அபிராமி... என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதுதொடர்பாக சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி பேட்டி ஒன்றில் கூறிய ராஷ்மிகா, ‛‛இது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுபற்றி பேசினால் விரும்பித்தானே இந்த வேலைக்கு வந்தீர்கள் என்கிறார்கள். நடிகையாக இல்லாமல் இதுவே ஒரு பெண் எதிர்கொள்கிறார் என்றால் என்ன நடக்கும். உண்மையில் அந்த பெண்களை நினைத்து பயம் வருகிறது. ஒருவேளை அதுபற்றி நான் பேசினால் டீப்பேக் என்றால் என்ன?, அது சரியானதா, என குறைந்தபட்சம் மக்களையாவது சென்றடையும். அதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது அவசியம்'' என்கிறார்.