'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் |

தமிழ் சினிமாவுக்கும், கோவைக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. இங்கிருந்த பட்சிராஜா, சென்ட்ரல் ஸ்டூடியோவில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
பல படங்கள் இங்கே படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இசைக்கும், கோவைக்கும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும்படியான தொடர்பு ஏதுமில்லை.
ஆனால், இளையராஜா துவங்கி, ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆன்டனி என எல்லா பெரிய இசையமைப்பாளர்களும், இங்கே கச்சேரி வைத்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இசைக்கச்சேரிகளுக்கு இங்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, அடுத்து இங்கே கச்சேரி நடத்த வருகிறார், தேனிசைத்தென்றல் தேவா!
வரும் ஏப்.,13ல், கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசைக்கச்சேரி நடக்கவுள்ளது. அதற்குத்தான், 'கொஞ்ச நாள் பொறு தலைவா!' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
தேவா என்றால் கானா!
தேவா என்றால் கானா...கானா என்றால் தேவா எனும் அளவுக்கு, தேவாவின் 'கானா' பாடல்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆட்டம், பாட்டத்துடனான கொண்டாட்டம் என்றால், அங்கே தேவாவின் 'கானா'வுக்கே முதல் மரியாதை.
ஆனால் 'கானா'வோடு நின்று விடாமல், தன் மெல்லிசையால் பல தேவ கானங்களையும் தமிழ் இசை ரசிகர்களுக்கு வழங்கியவர் தேவா.
அதனால் தான், அவருக்கு இளசுகள் முதல் பெரியவர்கள் வரை, எல்லா வயதுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். யூடியூப், இன்ஸ்டா, ஸ்பாட்டிபை என அனைத்து தளங்களிலும், அவரது பாடல்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.
சென்னை, புதுச்சேரியில் தேவாவின் கச்சேரி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. அடுத்து கோவையில் ஏப்.,13ல் நடக்கவுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில், திரை இசை பிரபலங்கள் சபேஷ்-முரளி, அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி.,சரண், உண்ணி மேனன் மற்றும் விஜய் டி.வி., சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்று, கோவை ரசிகர்களை மீண்டும் கொண்டாட்டத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சிக்கான போஸ்டரை, சமீபத்தில் தேவா வெளியிட்டார். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடக்கவுள்ள இந்த இசைக் கச்சேரிக்கு, கோவை மக்களிடம் வழக்கம் போல, அமோக வரவேற்பு இருக்கும் என்பது உறுதி!