பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா |

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளரான வீஜே பிரியங்கா தேஷ்பாண்டே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மேலும் பெயர் புகழுடன் வலம் வருகிறார். பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரியங்கா முன்னதாக பல மேடைகளில் தனது கணவர் குறித்து நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். ஆனால், சமீபகாலங்களில் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசுவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூட எந்தவொரு இடத்திலும் தனது கணவர் பற்றி பேசவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்று அப்போதே கேள்விகள் எழுந்தது. ஆனாலும், பிரியங்கா தரப்பிலிருந்து அதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை.
இந்நிலையில், ப்ரியங்கா தனது அம்மாவுடன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது பேசிய பிரியங்காவின் தாயார், 'பிரியங்காவை நினைத்து நான் மிக பெருமைப்படுகிறேன். ஆனால், இப்போது அவள் வாழ்க்கையில் செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று சத்தியம் செய்ய வேண்டும். சரியான நபரை மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிரியங்கா தனது காதல் கணவர் பிரவீனை பிரிந்துவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது.




