சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் சித்தார்த். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தெலுங்கில் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். இருப்பினும் தமிழ் நாட்டு நடிகரான அவருக்கு தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற ஆர்வமே அதிகமாக இருக்கிறது. அதனால்தான் காதலில் சொதப்புவது எப்படி படத்துக்குப்பிறகு ஒரு முறை டைரக்டர் சுந்தர்.சியை பார்த்தவர், தமிழ்ல நிறைய படம் பண்ணனும்னு ஆசையா இருக்கேன் சார். நீங்க என்ன வச்ச படம் பண்றதா இருந்தா எப்ப கேட்டாலும் கால்சீட் தர்றேன்னு சொன்னாராம் சித்தார்த். அதன்பிறகுதான் சித்தார்த்தை வச்சி படம் பண்ணனுங்கிற எண்ணம் ஏற்பட அவருக்கேற்ற கதை ரெடி பண்ணியிருக்கிறார் சுந்தர்.சி.
அதன்பிறகு உருவானதுதான் தீயா வேலை செய்யனும் குமாரு என்கிற படக்கதை. இந்த படத்தில் இதுவரை தமிழில் நடிக்காத அளவுக்கு பரபரவென்று பரபரப்பான நடிகராக நடித்திருக்கிறாராம் சித்தார்த். இருப்பினும் இப்படத்தின் ஆடியோ விழாவில் பேசியவர்கள் அவரை சாக்லேட் பாய் என்று புகழ்ந்து பேச டென்சன் ஆகி விட்டார் சித்தார்த். கடைசியாக அவர் மைக்கை பிடித்து பேசும்போது, சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை ஒன்று இருக்குன்னா அது சாக்லேட் பாய்தான். ஆரம்ப காலங்கள்ல வேணும்னா நான் அப்படி நடிச்சிருக்கலாம். ஆனா இப்ப என்னோட ரூட் மாறிடுச்சு. ரொமாண்டிக் மட்டுமில்லாம, ஆக்சன் கதைகள்லகூட நடிச்சிருக்கேன். அதனால, இனிமே என்னை யாரும் சாக்லேட் பாய்ன்னு சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் சித்தார்த்.