டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இன்று நேற்று நாளை என்ற படத்தின் இயக்குனரான ரவிக்குமார், அதையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கியிருந்தார். சில ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த அப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படமும் அவரது முதல் படத்தை போலவே சயின்ஸ் பிக்சன் கதையில்தான் உருவாகி இருக்கிறது.
இதையடுத்து அவர் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை உருவாக்கி அந்த கதையை சூர்யாவிடத்தில் கூறியிருக்கிறார். அதை கேட்ட அவர், தற்போது தனது கைவசமுள்ள படங்களில் நடித்து முடித்ததும் இந்த படத்தில் நடிப்பதாக ரவிக்குமாருக்கு உறுதி அளித்திருக்கிறாராம். அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‛இரும்புக்கை மாயாவி' படத்துக்கு பிறகு ரவிக்குமார் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பார் என்று தெரிகிறது.




