நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் படப்பிடிப்பு, சுற்றுலா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகள் என வருடத்தில் பல நாட்கள் விமானத்தில் பறந்தபடியே தான் இருப்பார்கள். அந்த வகையில் பெரும்பாலான பயணங்கள் சுகமான அனுபவங்களாக அமைந்து விட்டாலும் ஒரு சில நேரம் மறக்க முடியாத கசப்பான அனுபவத்தையும் அவை கொடுப்பதுண்டு. இது குறித்து பல பிரபலங்கள் அவ்வப்போது தங்களது கசப்பான விமான பயணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டும் உள்ளனர். இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.
சமீபத்தில் ஜெய்ப்பூர் செல்வதற்காக இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த மாளவிகா மோகனனுக்கு விமான பணியாளர்களின் சேவை ரொம்பவே மனம் நோகும்படி அமைந்துவிட்டது. இந்த அனுபவம் குறித்து அவர் சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “இண்டிகோ விமானத்தில் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் மோசமான சேவை கிடைத்தது. மேலும் பணியாளர்களின் மோசமான நடத்தையும் கூட” என்று குறிப்பிட்டுள்ளார்.