நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
மறைந்த இயக்குனர் ராசு.மதுரவன் இயக்கி இருந்த படம் 'மாயாண்டி குடும்பத்தார்' கடந்த 2009ம் ஆண்டு வெளியான இந்த படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சீமான், தருண் கோபி, சிங்கம் புலி, மயில்சாமி, மணிவண்ணன், பொன்வண்ணன், ரவிமரியா, பூங்கொடி, புனிதா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலபரணி ஒளிப்பதிவு செய்திருந்தார், சபேஷ் முரளி இசை அமைத்திருந்தனர்.
அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான குடும்ப சண்டையும், பங்காளி பகையும் ஒரு கட்டத்தில் அன்பால் இணைவது மாதிரியான கதை. சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதில் இரண்டாம் பரிசையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாகத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் 2ம் பாகத்தையும் தயாரிக்க உள்ளதாகவும், கதை, திரைக்கதை வசனம் எழுதி கே.பி.ஜெகன் படத்தை இயக்க உள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முதல் பாகத்தில் நடித்தவர்களில் மணிவண்ணன் தற்போது உயிருடன் இல்லை. அவர்தான் குடும்பத்தின் தலைவர் மாயாண்டியாக நடித்திருந்தார். தற்போது அவருக்கு பதிலாக அந்த கேரக்டரில் ராஜ்கிரணை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்து வருகிறார்கள்.