ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா | ‛96' இரண்டாம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதனா : பிரேம் குமார் மறுப்பு | ‛லப்பர் பந்து' ரீமேக்கில் ஷாருக்கானா : சுவாசிகா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷ் உடன் மோதும் அதர்வா? | சிம்பு எடுத்த முடிவு | ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில் | 100வது நாளில் 'டிராகன்' | நித்திலன் சுவாமிநாதனை அழைத்து பாராட்டிய ஹாலிவுட் பிரபலம் |
வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களை தயாரித்த 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர்.பிரபு திலக், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி.ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி உள்ளர். படம் பற்றி அவர் கூறும்போது “இது ஹெப்பர்லிங்க் ஜார்னரில் உருவாகி உள்ள படம். இதில் 4 தனிதனி கதைகள் இருக்கிறது. அவைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிற மாதிரியான திரைக்கதை. இதில் சமுத்திரகனி, மற்றும் யோகி பாபு நடிக்கும் கதைகள் முன்னணியில் இருக்கும். படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது” என்றார்.