20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
வால்டர், பாரிஸ் ஜெயராஜ் படங்களை தயாரித்த 11:11 புரொடக்ஷன் சார்பில் டாக்டர்.பிரபு திலக், தீ கமிட்டி பிக்சர் சார்பில் கி.ஆனந்த் ஜோசப் ராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'யாவரும் வல்லவரே'. சமுத்திரகனி, யோகி பாபு இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்க, இவர்களுடன் 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்த குமார், ரித்விகா, அருந்ததி மேனன், மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.
என்.ஏ.ராஜேந்திர சக்ரவர்த்தி இயக்கி உள்ளர். படம் பற்றி அவர் கூறும்போது “இது ஹெப்பர்லிங்க் ஜார்னரில் உருவாகி உள்ள படம். இதில் 4 தனிதனி கதைகள் இருக்கிறது. அவைகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து இறுதியில் ஒரு புள்ளியில் இணைகிற மாதிரியான திரைக்கதை. இதில் சமுத்திரகனி, மற்றும் யோகி பாபு நடிக்கும் கதைகள் முன்னணியில் இருக்கும். படம் வருகிற 29ம் தேதி வெளிவருகிறது” என்றார்.