நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது அக்கா மகனை கதாநாயகனாக வைத்து தனுஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கின்றார் என அவரது மனைவி ராதிகா சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷூடன் சரத்குமாரின் குடும்பம் உள்ள போட்டோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.