சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மாற்றத்தை பற்றி பேசுபவராக இருக்க வேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம் என்று நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா தெரிவித்துள்ளார். சமூக மாற்றத்திற்காக ஐயம் ஃபார் இந்தியா (இந்தியாவுக்காக நான்) என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார் லதா ரஜினிகாந்த். நமது நாட்டிற்காகவும், இளைஞர்களுக்காகவும் களம் இறங்கி இருக்கிறார். இதற்கான விழா கடந்த இருதினங்களாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த விழாவில் நமது பாரம்பரியம், தொன்மை, இசை, நடனம், வணிகம், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளின் அரங்கேற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் நிறைந்து இருந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை லதா ரஜினிகாந்த், மாற்றத்தை பற்றி பேசிக் கொண்டே இருப்பவராக இல்லாமல், மாற்றத்தை உருவாக்குபராக இருப்போம் என்ற கொள்கையில் அதிக நம்பிக்கை உடையவள் நான். பொதுவாழ்க்கையில் இருந்து கொண்டு பலதரப்பட்ட மக்களுடன் உரையாடுவதையே கடமையாக கொண்ட எனக்கு கல்வி, ஆரோக்கியம், உடல்நலம், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும், அதுவும் நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த உயரிய வாழ்க்கை முறையை திரும்பவும் கொண்டு வரவேண்டும் என்ற தாகம் உள்ளது. அதற்காக இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறேன் என்றார்.