எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொன்ன கருத்தினால் அவருக்கு எதிராக திரையுலகை சார்ந்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனால் அதையடுத்தும் அவர் வருத்தம் தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‛‛பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் எந்த பொதுவெளியில் நின்று எகத்தாளமாக அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து தொடச்சி தூர எரியனும்.
அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்திலும் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அங்கெல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி''
என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.




