'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் |
பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா சொன்ன கருத்தினால் அவருக்கு எதிராக திரையுலகை சார்ந்த பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் ஞானவேல்ராஜா. ஆனால் அதையடுத்தும் அவர் வருத்தம் தெரிவித்ததற்கு எதிராக இயக்குனர் சசிகுமார் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமுத்திரக்கனியும், ஞானவேல் ராஜாவுக்கு எதிராக மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ‛‛பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் எந்த பொதுவெளியில் நின்று எகத்தாளமாக அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ, அதே பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் கொடுத்த அந்த கேவலமான தரங்கெட்ட இன்டர்வியூவை சமூக வலைதளங்களில் இருந்து தொடச்சி தூர எரியனும்.
அன்னைக்கு கொடுக்காமல் ஏமாத்திட்டு போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பி கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் பருத்திவீரன் திரைப்படத்திலும் வேலை பார்த்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம் அங்கெல்லாம் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து வேலை பார்த்தவங்க. நீங்கதான் அம்பானி பேமிலியாச்சே. காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி''
என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சமுத்திரக்கனி.