விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' படத்தை ஹிந்தியில் வெளியிடுவதற்காக தணிக்கை செய்ய சென்றபோது அதற்கு 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக விஷால் தணிக்கை அதிகாரிகள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் புகார் கொடுத்த விஷாலை நேற்று மும்பை சிபிஐ அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி சிபிஐ முன் ஆஜரான விஷால், அவர்களிடம் தன் தரப்பு விளக்கத்தையும், தான் வைத்திருந்த ஆதாரங்களையும் வழங்கினார். விஷாலின் மானேஜ் ஹரி கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றி விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛சிபிஐ வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் ஆஜரானேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிந்து கொண்டேன். இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும்,'' என்றார்.