போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' படத்தை ஹிந்தியில் வெளியிடுவதற்காக தணிக்கை செய்ய சென்றபோது அதற்கு 6.5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக விஷால் தணிக்கை அதிகாரிகள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து மத்திய அரசின் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் புகார் கொடுத்த விஷாலை நேற்று மும்பை சிபிஐ அதிகாரிகள் அழைத்திருந்தனர். அதன்படி சிபிஐ முன் ஆஜரான விஷால், அவர்களிடம் தன் தரப்பு விளக்கத்தையும், தான் வைத்திருந்த ஆதாரங்களையும் வழங்கினார். விஷாலின் மானேஜ் ஹரி கிருஷ்ணனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதுபற்றி விஷால் வெளியிட்ட பதிவில், ‛‛சிபிஐ வழக்கு தொடர்பான விசாரணைக்காக மும்பையில் ஆஜரானேன். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. விசாரணை நடத்தப்படும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. சிபிஐ அலுவலகம் எப்படி இருக்கும் என்பது குறித்தும் அறிந்து கொண்டேன். இந்த அலுவலகத்திற்கு செல்வேன் என்று என் வாழ்நாளில் நான் நினைத்ததில்லை. ரீல் வாழ்க்கையில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஊழலுக்கு எதிராக நிற்க முன்வர வேண்டும்,'' என்றார்.