'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் திரைக்கு வந்து நேற்றோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது. அதனால் அப்படம் குறித்த பல பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் மாநாடு படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு, ‛லூப் தொடர்கிறது' என்று ஒரு பதில் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து, மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு-2 படத்தை அதே லூப் கதையில் இயக்கப் போகிறார் என்று சிம்புவின் ரசிகர்களும், தற்போது விஜய் நடித்து வரும் 68-வது படத்தையும் மாநாடு படத்தைப் போலவே லூப் கதை அம்சத்தில் தான் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், அதைத்தான் இப்படி லூப் தொடர்கிறது என்று அவர் பதிவிட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.