நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. மாறுபட்ட கதைகள், கதாபாத்திரங்கள் என அவருடைய படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அவர் நடித்துள்ள 'ஹை நான்னா' படம் வரும் டிசம்பர் 7ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று நானி கலந்து கொண்டு பேசினார். அப்போது விரைவில் ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன். அது பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிட முடியாது. சீக்கிரமே வெளியிடுவோம் என்றார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ' படத்திற்குப் பிறகு நானி, நேரடியாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. தான் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்தால் அதை தெலுங்கு ரசிகர்கள் தமிழ்ப் படம் போல நினைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் தெலுங்குப் படம் போல பார்க்கிறார்கள். 'பாகுபலி, காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு நடிகர்கள் யார் என்பதைப் பார்ப்பதில்லை. கதை என்னவென்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறேன். நான் தெலுங்குப் படங்களில் நடித்தாலும், அவை கண்டிப்பாகத் தமிழிலும் வெளியாகும்,” என்றார்.