கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நானி. மாறுபட்ட கதைகள், கதாபாத்திரங்கள் என அவருடைய படங்களுக்கு தென்னிந்திய ரசிகர்களிடம் வரவேற்பு அதிகம். அவர் நடித்துள்ள 'ஹை நான்னா' படம் வரும் டிசம்பர் 7ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நேற்று நானி கலந்து கொண்டு பேசினார். அப்போது விரைவில் ஒரு தமிழ் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளேன். அது பற்றிய அறிவிப்பை இப்போது வெளியிட முடியாது. சீக்கிரமே வெளியிடுவோம் என்றார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ' படத்திற்குப் பிறகு நானி, நேரடியாக எந்த ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. தான் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்தால் அதை தெலுங்கு ரசிகர்கள் தமிழ்ப் படம் போல நினைக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் தெலுங்குப் படம் போல பார்க்கிறார்கள். 'பாகுபலி, காந்தாரா' போன்ற படங்கள் வந்த பிறகு நடிகர்கள் யார் என்பதைப் பார்ப்பதில்லை. கதை என்னவென்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் நல்ல கதை உள்ள படங்களில் நடித்து வருகிறேன். நான் தெலுங்குப் படங்களில் நடித்தாலும், அவை கண்டிப்பாகத் தமிழிலும் வெளியாகும்,” என்றார்.