இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க, பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த படத்துடன் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதனால் வரப்போகிற பொங்கல் தினத்தில் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கப் போகிறார் சிவகார்த்திகேயன்.