'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசினார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல் படி மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக நேற்று அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். “த்ரிஷாவை ஒரு நடிகையாக மதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை. என் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிவித்தேன்” என்றார் மன்சூர் அலிகான்.
வழக்கு பதிவுக்கு முன்பு வரை நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறி வந்த மன்சூர் அலிகான் இப்போது மன்னிப்பு கேட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!
ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
காவல் அதிகாரி அம்மையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம் வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.