எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛துருவ நட்சத்திரம்'. ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 5 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக இன்று(நவ., 24) வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கவுதம் மேனன் தர வேண்டிய ரூ.2.40 கோடி பணத்தை திருப்பி செலுத்தாததால் படம் வெளியாகவில்லை. இன்று காலைக்குள் அந்த நிறுவனத்திற்கு ரூ.2 கோடி பணத்தை தர சென்னை ஐகோர்ட் கெடு விதித்து இருந்தது. ஆனால் அவர் செலுத்தவில்லை. இதனால் படம் இன்று வெளியாகவில்லை என கவுதம் மேனன் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட பதிவில், ‛‛மன்னிச்சுருங்க... 'துருவ நட்சத்திரம்' படத்தை இன்று வெளியிட முடியவில்லை. எங்களால் முயன்ற முயற்சிகளை செய்தோம். ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது. இந்த படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சி அடைய செய்கிறது. அதுவே எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் படத்தை ரிலீஸ் செய்வோம்,'' என தெரிவித்துள்ளார்.