ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு |
'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பலரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சிபி ஏற்கனவே குரு சோமசுந்தரம் ஹீரோவாக நடித்த 'வஞ்சகர் உலகம்' படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்திருந்தார், 'மாஸ்டர்' படத்தில் விஜய்யின் மாணவர்களில் ஒருவராக நடித்தார். தற்போது புதிய படம் ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராஹிம் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குகிறார்.
சிபியுடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் நிரோஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள். பாபு தமிழ் வசனம் எழுத, கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். கேபர் வாசுகி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.