விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரவீனா டாண்டன், அனுஹாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அன்றைய தேதியில் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் தயாராகி இருந்தது. என்றாலும் அப்போது படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் தயாரிப்பாளர் தாணு பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னாளில் அவர் கூறும்போது “பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. திட்டமிட்டதை விட 3 மடங்கு செலவானது. சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு பல ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாணு படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார். உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தை வரவேற்கும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் ஆச்சர்யமூட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள்.