காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
2001ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆளவந்தான்'. கமல்ஹாசன் இரண்டு வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரவீனா டாண்டன், அனுஹாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அன்றைய தேதியில் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படம் தயாராகி இருந்தது. என்றாலும் அப்போது படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் தயாரிப்பாளர் தாணு பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதுகுறித்து பின்னாளில் அவர் கூறும்போது “பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இடம் பெறவில்லை. திட்டமிட்டதை விட 3 மடங்கு செலவானது. சரியான திட்டமிடல் இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு பல ஆண்டுகள் ஆனது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தாணு படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார். உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இன்றைக்கு திரைப்படங்களில் நவீன தொழில்நுட்பத்தை வரவேற்கும் ரசிகர்களுக்கு ஆளவந்தான் ஆச்சர்யமூட்டும் படமாக இருக்கும் என்கிறார்கள்.