இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
ரஜினிக்கு சமீபகாலமாக கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பல நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ரஜினியை சந்தித்து வருகிறார்கள். சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்தார். தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்தியா இன்று அரையிறுதி போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது. இது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இதில் தோற்றால் இதுவரை பெற்ற வெற்றிகள் பயனில்லாமல் போகும்.
இதனால் இந்த போட்டியை இந்திய ரசிகர்கள் பரபரப்புடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் இந்த போட்டியை காண நேற்று இரவு ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் மும்பை புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரது பயணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு “கிரிக்கெட் விளையாட்டை பார்க்க போகிறேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்.
நள்ளிரவில் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய ரஜினி அங்கிருந்து தான் தங்கும் ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் 2 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியை ரஜினி பார்க்கிறார். போட்டி முடிந்ததும் இன்று மாலையே அவர் சென்னை திரும்ப திட்டமிட்டிருக்கிறார்.