'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
எந்த கட்சி புதிதாக ஆட்சிக்கு வந்தாலும் அந்த கட்சியை குளிரவைக்கும் முகமாக பாராட்டு விழா நடத்துவது தமிழ் திரையுலகின் வழக்கம். அந்த வகையில் ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 'பாசத் தலைவருக்கு பாராட்டு விழா' என்ற பெயரில் பிரமாண்ட விழா நடத்தினார்கள். ஜெயலலிதாவுக்கும் பிரமாண்ட விழா நடத்தினார்கள். அந்த வகையில் தற்போது முன்னாள் முதல்வரும், இந்தாள் முதல்வரின் தந்தையுமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
இந்த விழாவை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முன்னின்று நடத்துகிறது. பெப்சி அமைப்பில் உள்ள 24 சங்கங்களும் தங்களது பங்களிப்பை செய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று விழா குழுவினர் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். முறைப்படியான அழைப்பும் விடுத்தனர். இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.