கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாக இடைவெளி விட்டு, இடைவெளி விட்டு இப்படம் படமாகி வருகிறது. அடுத்த ஆண்டு இப்படம் எப்படியும் வெளிவந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராம் சரண் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காக படத்தின் முதல் சிங்கிளான 'ஜரகண்டி' பாடலை தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், தற்போது அதைத் தள்ளி வைக்கிறோம் என அறிவித்துள்ளார்கள்.
இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இருவேறு நிறுவனங்களின் 'டாகுமென்டேஷன்' காரணமாக, தவிர்க்க முடியாத காரணங்களால் 'கேம் சேஞ்சர்' படத்தின் 'ஜரகண்டி' பாடல் வெளியீட்டைத் தள்ளி வைக்கிறோம். வேறொரு நாளில் இது குறித்த அப்டேட்டுன் மீண்டும் வருகிறோம். ராம் சரண் ரசிகர்களின், ஷங்கர் ரசிகர்களின் காத்திருப்புக்கு இது மதிப்பானது. 'கேம் சேஞ்சர்' குறித்து வர உள்ள ஒவ்வொன்றும் சிறப்பானவை. உங்களை மகிழ்விக்க நிகரற்ற தரத்துடன் நான் ஸ்டாப் ஆக குழுவினர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தத் தள்ளி வைப்பு ராம் சரண் ரசிகர்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. 'ஜரகண்டி' பாடலுடன் தீபாவளியைக் கொண்டாடலாம் எனக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். 'ஜரகண்டி' எனப் பெயர் வைத்துவிட்டு தாமதம் செய்கிறார்களே என கோபமடைந்துள்ளார்கள்.