தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
தனுஷ், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், திடீரென பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவித்தனர். பொங்கலுக்கு வருகிறோம் என ஏற்கெனவே, 'அயலான், அரண்மனை 4, லால் சலாம்' ஆகிய படங்களை அறிவித்திருந்தார்கள்.
அந்தப் படங்களுக்கே தியேட்டர்களை பிரித்துக் கொடுப்பதில் தடுமாற்றம் நிலவி வரும் சூழலில் தற்போது 'கேப்டன் மில்லர்' படமும் அந்தப் போட்டியில் வந்துள்ளது. இது முன்னர் அறிவித்தவர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். 'அயலான்' படத்தை ஏற்கெனவே தீபாவளிக்கு வெளியிடுவதாக அறிவித்து பின் பொங்கலுக்குத் தள்ளி வைத்தார்கள். அப்படம் கடந்த சில வருடங்களாக படமாக்கப்பட்டு இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' படம் பொங்கலுக்கு வராது, தள்ளிப் போகலாம் என ஒரு தகவல் வெளியானதால்தான் 'கேப்டன் மில்லர்' படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்தார்களாம். ஆனால், அன்றைய தினத்தில் படம் வந்தே ஆக வேண்டும் என ஐஸ்வர்யா முடிவெடுத்து வேலைகளை முடுக்கி விட்டாராம். அதனால்தான், டீசர் பற்றிய அறிவிப்பும் வெளியாகியது என்கிறார்கள்.
இப்போது நான்கு படங்கள் போட்டியிட உள்ள சூழலில் எந்தப் படமாவது வெளியீடு தள்ளிப் போகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.