டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று கலக்கி வரும் வாணி போஜன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ரேக்ளா, ஆர்யன் என வரிசையாக படங்களை கையில் வைத்திருக்கும் அவர், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், ‛சில படங்களில் தேவையில்லாமல் படுக்கையறை காட்சிகளை வைக்கிறார்கள். அந்த காட்சி படத்திற்கு தேவையில்லை. எனவே, நான் ஏன் மசாலாவாக அந்த காட்சியை எடுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதன்பின் அந்த காட்சியை எடுக்காமல் முடித்தார்கள். நடிப்பு என்று வரும் போது கதாபாத்திரம் தான் முக்கியம். கதாபாத்திரமும் கதைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பணத்தை விட நான் நடிக்கும் கதாபாத்திரம் தான் முக்கியமானது' என்று கூறியுள்ளார்.




