கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |
தமிழில் 'நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, வாயை மூடிப் பேசவும், திருமணம் எனும் நிக்காஹ்'' ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. ஐந்தே படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் சூர்யாவின் 43வது படத்தில் நடிக்க உள்ளார்.
மலையாள நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்து கொண்ட பின் நடிப்பிலிருந்து கொஞ்சம் விலகி பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். நஸ்ரியாவின் மாமனார் பாசில் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் சில பல தரமான படங்களைத் தந்தவர்.
“பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, வருஷம் 16, அரங்கேற்ற வேளை, கற்பூர முல்லை, கிளிப்பேச்சு கேட்கவா, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, ஒரு நாள் ஒரு கனவு” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவற்றில் “பூவே பூச்சூடவா, பூ விழி வாசலிலே, வருஷம் 16, காதலுக்கு மரியாதை” ஆகிய படங்கள் பெரிய வெற்றியைப் பெற்ற படங்கள். விஜய் நடித்த 'காதலுக்கு மரியாதை' படம் 200 நாட்களைக் கடந்து ஓடிய படம்.
தமிழில் 2005ல் வெளிவந்த 'ஒரு நாள் ஒரு கனவு' படத்துடனும், மலையாளத்தில் 2011ல் வெளிவந்த 'லிவிங் டுகெதர்' படத்துடனும் இயக்குவதை நிறுத்திவிட்டார்.
நடிகை நஸ்ரியா மாமனார் பாசில், கணவர் பகத் பாசில் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பாசில் உடல் இளைத்த தோற்றத்தில் இருக்கிறார். இருப்பினும் அவரது முகத்தில் இருக்கும் மலர்ச்சி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அப்புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.