22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ரஜினியின் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் அல்லது அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களை நெல்சன் இயக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது கோலமாவு கோகிலா படத்தை அடுத்து மீண்டும் நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து ஒரு பான் இந்தியா படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
தற்போது நயன்தாரா அன்னபூரணி, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, கமல் 234வது படம் என பல படங்களில் நடித்து வரும் நிலையில், கோலமாவு கோகிலாவுக்கு பிறகு தான் கதையின் நாயகியாக நடித்த படங்கள் ஹிட்டாக அமையாததால், மீண்டும் நெல்சனுடன் இணைந்து ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என்று நயன்தாராவும் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், நயன்தாராவை வைத்து தான் இயக்கும் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம் நெல்சன்.