போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாய் மாறி வரும் கலையுலகில் மாறா இளமையோடு, இன்றும் மனம் கவர்ந்த திரை ஆளுமையாக வாழ்ந்து வரும் நடிகர் சிவகுமாரின் 82வது பிறந்த தினம் இன்று… “காக்கும் கரங்கள்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை தந்திருக்கின்றார். குறிப்பாக “பொன்னுக்கு தங்க மனசு”, “கண்மணி ராஜா”, “அன்னக்கிளி”, “உறவாடும் நெஞ்சம்”, “கவிக்குயில்”, “சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு”, “பூந்தளிர்” மற்றும் இவரது 100வது படமான “ரோசாப்பூ ரவிக்கைக்காரி”, “அக்னி சாட்சி” மற்றும் “சிந்து பைரவி” ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய முக்கியமான படங்களாகும்.
சிவகுமார் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவில், ‛‛அண்ணன் சிவகுமார், தலைமுறை தாண்டும் கலைஞர்களில் மூத்தவர்; தொழில் மீதான மரியாதைக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்; ஓவியக் கலைஞராக இருந்து நடிகராக மலர்ந்து இன்று மாபெரும் சொற்பொழிவாளராகவும் பரிணமளிக்கிறார். சிவகுமார் அண்ணன் அவர்களை இப்பிறந்த நாளில் மகிழ்வோடு வாழ்த்துகிறேன். நீடு வாழ்க!'' என குறிப்பிட்டுள்ளார்.