பவதாரிணி குரலை இப்படி பயன்படுத்துவேன் என நினைக்கவேயில்லை : யுவன் உருக்கம் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி | ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி… | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் | லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார் | ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்… - 100 மில்லியனைக் கடந்த முதல் 80ஸ் பாடல் | காக்கிச் சட்டையில் மீண்டும் கலக்கும் விஜயசாந்தி | அடுத்தடுத்த நஷ்டம் : அலுவலகத்தை விற்ற ரகுல் ப்ரீத் சிங் மாமனார் | திரையிசையில் தமிழ் வளர்த்த சிறுகூடல்பட்டி சித்தர் 'கவியரசர்' கண்ணதாசன் | ஏழு ஸ்வரங்களை நேசித்து, இசையை மட்டும் சுவாசித்த எம்எஸ் விஸ்வநாதன் |
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மீண்டும் அவர் இயக்கும் தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இயக்குநர்கள் கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது குறித்த புகைப்படத்துடன் ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விஷால்.
அதில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றபோது சரியாக மழையும் வந்தது. இதை எங்களை இறைவனே வாழ்த்தியது போல் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் விஷால். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.