ரூ.6 கோடியை திருப்பி கேட்டு ரவி மோகன் மீது வழக்கு : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்டு தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு | கதாசிரியர் ஆன தமன் | பிளாஷ்பேக் : தமிழில் ஹீரோவாக நடித்த விஷ்ணுவர்தன் | பிளாஷ்பேக் : சிவாஜி பட தலைப்பில் நடித்த எம்.ஜி.ஆர் | குறுக்கு வழியில் முன்னேறும்போது 4 வருடம் போராடி ஜெயித்துள்ளேன் : புதுமுக நடிகை அதிரடி | ஹரிஹர வீரமல்லு - எந்த 'கட்'டும் இல்லாமல் ‛யு/ஏ' சான்று | ‛புதிய பயணம்...' : ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன் | ‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு |
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றம்சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர் சொன்னது பல யூகங்களை உண்டாக்கியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார். அது வருமாறு: சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்து வைக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார்.
இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவாக இல்லாதது பிடிக்கவில்லை. நியாயத்து பக்கம் நின்றார். ஒரு வருடத்திற்கு முன்பே பெண்ணையெல்லாம் பார்த்த பிறகு தான் இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு அரசியல்வாதிகளை வைத்து உங்கப்பாவை கொன்னுடுவோம் என்று மிரட்டி 46 நாட்களிலே விவாகரத்தும் வாங்கினார்.
இமானுக்கு இப்போ பட வாய்ப்புகள் இல்லை. அதுனாலதான் இப்படி எல்லாம் பேசி விளம்பரம் தேடுகிறார். அது மூலமாக பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார். இந்த விஷயம் என்னை விட சிவகார்த்திகேயனை எந்தளவு பாதிக்கும் என்று அவர் யோசிக்கவில்லை. எங்களுக்கு நல்லது நினைத்த ஒருவருக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக வருந்துகிறேன்.
இவ்வாறு மோனிகா கூறியுள்ளார்.